அவர்களும் இவர்களும் – பாரதி அட்சயா
அதுதான் முதலில்
எழும்பியதாகவும்
எழும்பியதாகவும்
இவர்கள்தான் அதை இடித்து
இதை எழுப்பியதாகவும்
அவர்கள் கூக்குரலிட்டார்கள்.
இல்லை, இதுதான்
முதலில் இருந்தது, அவர்கள்
இடித்து அதைக்
கட்டியதால்தான்
அதை இடித்து
இதைக் கட்டியதாக
இவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
இது முதலா, அது முதலா
என்ற சண்டை
முதலிலிருந்தே இருக்கிறது.
அவரவர் ஆதாரம்,
அவரவர் நியாயம்,
எதையும் நம்பி
உயிரையும் விட
அணிக்கு ஆயிரமாயிரம்
தொண்டர் படை
பேரணிகள், கூக்குரல்கள்
கூச்சல்கள், குழப்பங்கள்,
நீதிமன்ற விசாரணைகள் !
இவர்களில் பல பேரும்
அவர்களில் பல பேரும்
செத்தபின்னரும் தொடரும்
முடிவில்லா விசாரணை
முடிவது எப்போதென,
பக்தனின்றி சோகமாய்
உள்ளே காத்திருக்குது
அதுவா, இதுவா
எனவறியா தெய்வம்!
*********
