Sunday, February 2, 2014

கொன்றால் பாவம் தின்றால் போச்சு!

ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம், அதென்ன, 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு!'ன்னு ஒரு பழமொழி?

கொல்ற பாவம் தின்னா எப்படிப் போகும்?

யோசிச்சுப் பாத்தா சூப்பரான அர்த்தம் இந்தப் பழமொழியில பொதிஞ்சிருக்கிறது தெரிஞ்சுது.

அதாகப்பட்டது, ஒரு சிங்கம் பசியில இருக்குது. அப்ப அங்க வர்ற ஒரு மானைக் கொன்னா அதுல என்ன தப்பு?

மாமிசம்தானே சிங்கத்தோட உணவு, அதுனால பசிக்காக இன்னொரு மிருகத்தைக் கொல்றதுல தப்பு இல்லையே!

ஆனா அதே சிங்கம், வயிறு புல்லா இருக்கும்போது, அந்த வழியா போற ஒரு மானை, ச்சும்மானா அடிச்சுக் கொல்லலாமா? அது தப்புதானே!

இதான் இந்தப் பழமொழியோட விளக்கம்.

ஸ்டாப், ஸ்டாப், மனுஷப் பயலுகளுக்குத்தானே இந்தப் பழமொழின்னு நெனச்சா, இதென்னய்யா மிருகத்துக்கு விளக்கம் கொடுக்கறேன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லுதா? வெயிட்..வெயிட்..

மனுஷன் அசைவம்தான் சாப்பிடணும்னு இல்ல, தாராளமா சைவம் சாப்பிடலாம்ல.  அப்டினா, மிருகங்களைக் கொல்றது பாவம்தான?

ஆமாம், நிச்சயம் பாவம்தான். அப்றம் எப்டி இந்தப் பழமொழி சரியாப் பொருந்தும்?

அதாகப் பட்டது, சாப்பிடறது பாவம் தான். ஆனா, சாப்பிடற ஆள் இருக்கற வைக்கும், வெட்றதுக்கு ஒரு கறிக்கடை பாய் இருக்கத்தானே செய்வார்?

( Malthus ன் Theory of Demand and Supply க்கு பக்கமா வர்ற மாதிரித் தெரியுது)

அது அவரு தொழில் இல்லையா? அதுனால அவருக்கு எப்படிப் பாவம் கணக்குல ஏறும்?

திங்கவே ஆள் இல்லாம, ஒரு ஆட்டை வெட்டினாதான் அது பாவம்.ஏன்னா அதுக்கு என்ன அவசியம், அந்த ஆட்டை துன்புறுத்தணும்கிறது மட்டும்தான், இல்லையா?

ஆகவே (கறிக்கடை பாய்) கொன்னா பாவம், (வாங்கி யாராவது) தின்னா போச்சு,( வாங்கித் தின்னவனுக்கு போய் சேந்துடும்)!

பாய், நீங்க தாராளமா வெட்டுங்க, பாவம்லாம் திங்கற பயபுள்ளங்களுக்குத்தான்!