Monday, August 20, 2012

தொலைந்த காலணி..



சீறிச் செல்லும் வாகனங்களிடையில்
ஒற்றையாய் சிதைந்து கிடந்ததந்த
புத்தம்புதிய பிஞ்சுக் காலணி.....
தாயின் வயிற்றை அணைத்துப் பிடித்து
இரு சக்கர வாகனத்தின் இசைவில்
உறங்கிப் போன வேளையில்
காலணியைத் தவறவிட்ட குழந்தை
வீடு போய் விழித்தவுடன்
வாங்கிய அன்றே தொலைந்து போன காலணிக்காய் அழும்போது
சோகமாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு
துக்கம் அனுஷ்டித்தது
தொலையாத இன்னொரு காலணி !

http://puthu.thinnai.com/?p=13819

No comments:

Post a Comment

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..