Wednesday, July 4, 2012

வாழ்ந்து காட்டுதல்



தி.ந.இளங்கோவன்
வேலை கொடுப்பதொன்றே
உம் வேலையென் றெண்ணி யெனக்கு
சுமையேற்றியே யதில் சுகம் கண்டாய்,
சொல்லித்தர மறந்தாய், சில நேரம் மறுத்தாய்.

சுயம்புவாய்க் கற்றேன்,
சூட்சுமங்களனைத்தையும்…
கொடுத்த பணியில்
நிலுவை வைத்தது நினைவிலேயே யில்லை…

பாராட்டென்ற வார்த்தையே யுமக்கு
பழக்கமில்லா தொன் றென்பதை
அனுபவத்தில் அனுதினமும்
எதிர்பார்த்து கண்டுணர்ந்தேன்.

ஆனாலும் அரிதிலும் அரிதாய்
இழைத்துவிட்ட சின்னஞ்சிறு
தவறொன்றை ஊதிப் பெரிதாக்கினாய்..
பிறர்முன் என்னை சிறிதாக்கினாய்.

இருந்த போதும் உமக்குப் பாதம் பணிகிறேன்…
ஒரு அதிகாரியாய் எப்படி இருக்கக் கூடாதென
உதாரண புருஷனாய் நித்தனித்தம்
வாழ்ந்தெனக்கு காட்டுவதால்…

படத்திற்கு நன்றி :

No comments:

Post a Comment

படிச்சீங்களா? ஒன்னும் சொல்லாம போனா எப்படி? அட்லீஸ்ட் திட்டவாவது செய்யுங்க..